Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

பரமஹம்சர் கண்ட பராசக்தி!

, , ,

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

"சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!"

இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
ஆடிக்களிப்பவன் யாரோ அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.


"பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
எந்த படித்துறையிலும் இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
பலவழிகளைக் காட்டுகின்றன "என்கிறார் பரமஹம்சர்.

சக்திசமயத்திலும் பலபடித்துறைகள் உண்டு.

தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.


பாரதியாரின் ஊழிக்கூத்து பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
ஆகாயம் கறுத்து வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும் என மேலும் சொல்கிறார்.

தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

பேயைக்கொலையை
பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

என்கிறார் பாரதியார்.

அன்னை அன்னை ஆடுங்கூத்தை
நாடச்செய்தாய் என்னை...

சக்திப்பேய்தான் தலையொடுதலைஅக்ள்முட்டிச்- சட்டச்
சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
நின் விழியனல்போய் எட்டித்-தானே
எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

தனது மார்க்கம் இறையைத் தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ பாவித்துவணங்கலாம் என்னும்
பரமஹம்சர்" நான் என்னைக் என்னைகுழந்தையாகபாவித்துக்கொண்டேன் "என்கிறார்.

மனம் உள்முகமாகத் திரும்பினால் அதுவாசற்கதவை சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் எனபமதங்கள்கூறுவதை ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
நிலையில் உயரலாம்.

யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?

தியானம்-

, , ,

தியானம்

ஓங்காரம்

இருளில் இருந்து பிரகாசத்திற்கு உயர்த்துவதின் அடையாளக் குறிப்பாகவே
ஓங்காரத்தைக் கருதி வந்தனர்.இந்துமதம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மதத்தின் ஆதாரப் பிரும்மத்தின் தெளிவின் கண்ணோட்டமான உருவம் இது ஆகும்.ஓங்காரத்தினை உச்சரிக்கும் போதே அந்தச் சின்னம் மனதில் உதிக்கும்.

�அ-உ-ம என்ற மூன்ற எழுத்துக்களின் சேர்க்கையே ஓங்காரம் ஆகும்.சகல விதமான வேத ஆகமங்களும், உபநிசச்துக்களும், சித்புருசர்களின் ஞான நூற்களிலும் இந்த பிரணவ மந்திரத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசப் படுகிறது.பதஞ்சலி மஹாமுனிவர் தனது நூற்களில் ஓங்கார ஜெபமும் தியானமும் செய்யும் ஒரு நபருக்கு சமாதி நிலையை அடைய இயலும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஓன்றும் இல்லாத பரவெளியாகிய வெட்ட வெளியில் முதலில் உதித்தது �இம்�என்ற மவுன மொழியாகும்.இதையே சித்தர்கள் தமது நூற்களில் சொல்லற சும்மா இரு என்று சொல்லப் பட்டுள்ளது.

சப்தம் பிறந்த இடத்தில் சகல கலையும் உதிக்கும் என்பது முது மொழி ஆகும்.
.திரி மூர்த்திகளில் 1.பிரம்மா தனது பத்தினியாகிய சரஸ்வதியின் வீணையின் நாதத்தில் இருந்து ஒலிக்கும் பிரணவ மந்திர சப்தாட்சரத்தின் ஒலியோடு இயைந்து பரப் பிரம்மத்தை நோக்கித் தவம் இருத்தலையும்�� அடுத்ததாக 2.மஹாவி~;ணுவானவர் அநந்த சயனத்தில் இருந்த வண்ணம் பிரணவ சப்தத்தனை கேட்டு பரப் பிரம்மத்தை நோக்கி இருத்தலையும், பின்னர் 3.சிவன் தமது உடுக்கையின் பிரணவ சப்தத் தொனியில் மனோலயப்பட்டு பரப்பிரும்மத்தை நோக்கித் தவம் இருத்தலையும் சித்திர வடிவில் நாம் கண் கூடாகக் காண முடிகிறது.

எனவே முறையாக ஜெபம் செய்கின்ற ஓம் என்ற மந்திர வழிபாட்டின் மூலம்
அ~;டமா சித்துக்களாகிய அணிமா, மஹிமாஈ லஹிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், வசித்துவம், ஈசத்துவம் என்ற சித்துக்களை அடைந்து முடிவில் பிறவா முத்தி சித்தித்து
வீடு பேற்றினை அடையலாம்.

மந்திரம்-கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர்,சரஸ்வதி மந்திரம்

, ,

கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர்,சரஸ்வதி மந்திரம்.

ஹயக்ரீவர் மூல மந்திரம்

�உக்தீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய�---என்று ஜெபம் செய்யவும்.

ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்

�ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத் !

ஹயக்ரீவர்தியான ஸ்லோகம்

1.ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே

2.சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சர்ர்பஜம் சம்பூர்ணம்
சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே�

சரஸ்வதி காயத்ரீ மூல மந்திரம்

1. ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பர்ந்யை ச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத் !

2.ஓம் வாக் தேவீச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத் !�என்று மேற் கண்ட தியான மூல மந்திரங்களை ஜெபம் செய்து வழிபாடு செய்து வர கல்வி, கேழ்விகளில் மஹா வல்லவனாகி பெயர், புகழ் அடைவார்கள்.

நரம்பு தளர்ச்சி நீங்க......

, , ,

நரம்பு தளர்ச்சி நீங்க
சித்த மருத்துவம்.

1.வல்வாரைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி நீங்குவதடன் மன தைரியமும் ஆண்மையும் பெருகும்.

2.செம்பருத்திப் பூவைப்: பொடி செய்து அத்துடன் தேன் அல்லது தண்ணீருடன் சேர்த்துக்
கலந்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதுடன் இதய சம்பந்தமான நோய்களும் தீரும்.

3.எலும்பிச்சம் பழச் சாற்றுடன் சிறிது திப்பிலி சர்க்கரை இவற்றைச் சேர்த்து அரைத்து அளவாய் உண்டு வர நரம்பு தளர்ச்சி தீரும்.

4.வல்லாரை�� தூதுவளை ஆகியவை சம எடை எடுத்து உலர்த்திப் பொடித்து பசுவின்
மோரில் கலந்து குடித்து வர நரம்பு தர்ச்சி தீரும்.

5.வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுடன் பசுவின் பாலைச் சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு அருந்தி வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

6.மாதுளம் பழச் சாற்றுடன் Nசுத்தமான தேன் சேர்த்த உண்டு வர நரம்பு தளர்ச்சி தீரும்.
நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.

சுக்கு,மிளகு,திப்பிலிகோ~;டம்,அதிமதுரம்,ஜீரகம்,ஏலம்,வால்மிளகு,கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி இவைகள் வகைக்கு 10கிராம் வீதம் எடுத்து இள வருப்பாக வறுத்து சூரணம் செய்து வைக்கவும்.

700கிராம் சீனா கற்கண்டை 700 மில்லி பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட இரண்டு சூரணங்களையும் பாகில் தூவிக் கிண்டி பின் நெய்
175கிராம் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைத்து சத்தமான தேன் 175 கிராம் விட்டுக் கிண்டி ஜாடியில் பத்திரப் படுத்தவும்.இதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும்.

இளம் பிராயத்தின் மொழி........

, , , ...



பேசும் மொழியின் பல சாத்தியக்கூறுகளை நமக்கு முன் கடை பரப்பிச்சென்றதான இளம் பருவங்கள் இப்போதைய நகரத்து இளம் தலை முறைகளுக்கு ஆட்பட்டுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வி.

மொழி என்பதனை சம்பாஷானைகளுக்குண்டான கருவி என்று எடுத்துக்கொண்டால், உடல் மொழியும், அந்நிய பாஷைகளும் அதனதன் ஆதிக்கத்தை இளசுகளிடையே பதித்து வைத்திருந்தாலும் நாம் சிறு வயதில் கிராமப்புறங்களின் குளக்கரைகளில், தண்ணீர் தொட்டி அருகில், கோவில் வாசல்களில், பந்தடிகளில், பேசித்திரிந்த தமிழ் மொழியின் பல் வேறு பட்ட சாத்தியங்களை இவர்கள் அறிந்திருக்கவில்லைதான். அதற்கான ஆர்வங்கள் கூட அற்று இருப்பதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அவலம்.

சிறு வயதில் பேசிப்பழகிய சில தமிழ் மொழியின் வடிவங்கள்.


லானா பஷை

நீ எங்க போற

நில் நீ எல் எங்க பொல் போற

நான் உன் கூட வரேன்

நல் நான் உல் உன் குல் கூட வல் வரேன்

அந்தப் புத்தகம் படித்தாயா

அல் அந்தப் புல் புத்தகம் பல் படித்தாயா


இது போன்ற வார்த்தை பிரயோகங்களை யார் உருவாக்கினார்கள், எங்களுக்கு கற்றுத்தந்தது யார், இன்று வரை யோசித்ததில்லை ஆனால் இப்போது கார்டூனும் நாட்ஜியோவும் பார்க்க சிறு பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கத்தேவையில்லாதது போலவே இது நமக்கு வழிவந்துள்ளது.


கானா பாஷை

நீ எங்க போற

கநீ கஎகங்கக கபோகற

நான் உன் கூட வரேன்

கநாகன் கஉகன் ககூகட கவகரேகன்

அந்தப் புத்தகம் படித்தாயா

கஅகந்கதகப் கபுகத்கதகககம் கபகடிகத்கதாகயா


மிக வேகமாக வந்து விழக்கூடிய இந்தச்சொற்கள் தரும் இன்பம் அன்றும் இன்றும் விவரிக்க முடியாததாகவே இருக்கிறது.

இது போன்ற மற்றுமொரு வழக்கமும் இருந்தது


திருப்பி

நீ எங்க போற

றபோ கங்எ நீ / நீ கங்எ றபோ

நான் உன் கூட வரேன்

ன்ரேவ டகூ ன்உ ன்நா / ன்நா ன்உ டகூ ன்ரேவ

அந்தப் புத்தகம் படித்தாயா

யாதாத்டிப ம்கதத்பு ப்தந்அ / ப்தந்அ ம்கதத்பு யாதாத்டிப


இப்படி பேசுவது பெரும்பாலும் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே இருந்தாலும், பெரும்பாலும் பெண்குழந்தைகளே இதை அதிகம் பிரயோகித்து பார்த்திருக்கிறோம். என் வீட்டில் இருவருமே பெண் பிள்ளைகள் என்ற காரணத்தில் ஆண்கள் உலகமும் அவர்கள் பிரத்யோக பாஷயும் எங்களுக்கு மிகவும் அந்நியமாகவே இருந்து வந்ததும் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இந்த வியப்பு இன்னும் என் இரு மகன்களின் சம்பாஷனையே கேட்க கேட்க விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதைய பெண் பிள்ளைகளின் பேச்சும் இப்படித்தான் இருக்குமோ இதை அறிந்து கொள்வதற்காகான சாத்தியக்கூறும் இல்லாமல் போனதில் வருத்தம் தான்.

இப்போது இது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறதா, வார்த்தைகளை வேகமாக கையாளும் சாகித்யத்தை நாம் இன்னும் கொண்டிருக்கிறோமா என்று சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அதற்காக நம் சிறு வயது தோழி தோழியர்களை சந்தித்து உரையாடவேண்டும் என்று ஊர் ஆசைகளையும் தோற்றுவிக்கிறது. பிறந்த கிராமங்களை குறித்த காதலுக்கு வெவ்வேறு வடிவங்கள்.

அப்பா செல்லங்களுக்கு அறிவாற்றல் அதிகம்!

, , , ...

தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன் நியூகாஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு நடத்தினர். பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 11 ஆயிரம் பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், பெற்றோர்களுடன் சேர்ந்து வாழும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் அதிகமாக இருந்தது.

அதிலும் குறிப்பாக தந்தையருடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ எனப்படும் கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பது தெரியவந்தது.

இதில், மற்றொரு முக்கிய அம்சம். பெரும்பாலும் ஆண் குழந்தைகள் அம்மாவிடமும், பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்புடன் ஒட்டிக்கொள்கின்றன என்பதும் தெரியவந்தது.

எனவே, அலுவலகம், பணம் என ஓடிக்கொண்டே இருக்கும் ஆண்கள், தங்கள் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடவேண்டும்.

இது, குழந்தைகளின் அறிவாற்றலுக்கு வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........

, , , ...

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...

* பிசிஜி - பிறப்பின் போது
* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது
* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்
* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்
* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்
* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்
* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்
* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்
* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்
* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்
* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்
* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்
* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்
* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்
* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்
* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்
* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்
* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்
* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்
* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31