Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "Culture"

சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா?

, , ,

பல ஆண்டுகளாகச் சத்துணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளின் உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் இதய சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். இதனால் நீண்ட நாள் வாழ முடியும் என்று புகழ்ந்து பாடி வருகிறார்கள்.

இந்தப் புகழ்பாடலில் இதே உணவுத்திட்டம் புற்றுநோய் கோளாறுகளையும் குணமாக்குகிறது என்பதையும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், நீண்ட நாள் வாழ வேண்டுமா? அப்படியானல் இயற்கை வழியையே பின்பற்றுங்கள். உணவு முறைகளின் மூலம் ஆயுளை ஆரோக்கியத்துடன் நீடித்து வாழுங்கள் என்கின்றனர்.

1994 இல் யுனிவர்சிட்டி ஆப் ஸ்டீ எட்டினி மாரடைப்பு வந்து மீண்ட 605 ஆண்-பெண்களைத் தேர்வு செய்தது. இவர்களில் பாதிப்பேர்களை அமெரிக்க இதயக் கழக சிபாரிசு செய்த உணவுத் திட்டப்படி இறைச்சி, ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலியன சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். இது முழுநலம் தரும் உணவுத் திட்டம்தான்.

மீதிப்பேர்களை இயற்கை உணவைச் சாப்பிடச் சொன்னார்கள்.

அதாவது இறைச்சி, ஐஸ்கிரீம், வெண்ணெய் முதலியவற்றைக் குறைத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதற்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பீன்ஸ், மீன், ஆலிவ் எண்ணெய், சபோலா ஆயில் அல்லது கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்கள். ஆடு, மாடு, கோழி முதலிய இறைச்சி வகைகள் இவர்களுக்குக் கிடையாது.

நான்கு ஆண்டுகள் கழித்து (1998இல்) இவர்களைப் பரிசோதித்தார்கள்.

இயற்கை உணவுத் திட்டக்காரர்களிடம் 7 பேர்களே புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள். ஆனால், அமெரிக்க இதயக்கழக உணவுத் திட்டக்காரர்களில் 12 பேர் புற்றுநோய் அறிகுறியுடன் இருந்தார்கள்.

முதல் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆராய்ந்த முடிவுப்படி இவர்களுக்கு இயற்கை உணவை நன்கு சாப்பிடச் சொல்ல புற்றுநோய் குறைந்தது.

இதய நோயைத் தடுக்கும் இயற்கை உணவில் புற்றுநோயைத் தடுக்கும் அம்சம் எது என்பதையும் நுணுகி ஆராய்ந்தார்கள். மத்திய தரைக்கடல் நாடுகளில் குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்களே இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதற்குக் காரணம் இயற்கை உணவில் உள்ள நார்ச்சத்து, நச்சுமுறிவு மருந்து, மரபணுக்கள் உடைவது (டி.என்.ஏ. உடைவது), முதுமைத் தோற்றம் உண்டாவது போன்ற எல்லா பிரச்னைகளையும் தடுக்கும் சி வைட்டமின், முதலியவையே காரணம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

இதயநோய், புற்றுநோய் உட்பட எந்த நோயும் இன்றி வாழ சரியான நேர்வழியான இயற்கை உணவுத் திட்டத்தையே பின்பற்றுவது நலம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

இயற்கை உணவில் என்ன இருக்கிறது?

தக்காளியில் உள்ள வைகோப்பன், பழத்தோல்களில் உள்ள ப்ளோவினாய்ட்ஸ், எலுமிச்சை யில் உள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தில் உள்ள மெதியோனின் என்ற அமிலம், மீனில் உள்ள டைரோசின் அமிலம் மற்றும் துத்தநாக உப்பு முதலியவையே இத்தகைய உணவில் அதிகம் இருப்பதால் நோயின்றி நீண்ட நாள் வாழ்க்கையைத் தருகிறது. எல்லா நோய்களையும் இவை தடுத்து கட்டுப்பாட்டில் வைப்பதால் வாழ்நாள் நீடிக்கிறது.

( Thanks to : http://tamilvanan.com/content/healthy-life )

(Source:- http://tamizh2000.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88)

அதிசயக்கட்டளைகள் அய்ந்து......

, , ,

‘சொந்தக் காலில் நிற்பது முக்கியமில்லை. நின்ற இடத்தில் நிலைப்பதுதான் முக்கியம்’ என்பார்கள். எந்த ஆபீஸில் வேலை செய்தாலும் அதில் நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும். அதற்கு 5 எளிய வழிகள்.

1.நீங்கள் என்னதான் நல்லவராகவும், நாணயமானவராகவும் இருந்தாலும் திறமை இல்லாவிட்டால் மதிப்பு இருக்காது. எனவே, ஒவ்வொரு மாதமும் உங்கள் திறமையில் ஒரு சதவீதத்தையாவது கூட்டிக் கொள்ளுங்கள்.

2.ஆபீஸில் பலம்பொருந்தியவர் யார் எனக் கண்டறியுங்கள். அவர்கள் சொல்லும் வேலைகளை விரைந்து முடியுங்கள். அவர்கள் விரும்பும் விதத்தில், எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்து முடிப்பவர் என்ற இமேஜை எல்லோரிடமும் வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான நேரங்களில் இது கை கொடுக்கும்.

3.ஆபீஸ் என்றால் கோஷ்டி அரசியல் இல்லாமல் இருக்காது. நீங்கள் எந்த கோஷ்டியிலும் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளாதீர்கள். முடிந்தால், அந்த கோஷ்டிகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுங்கள். இது அதிக பலன்களைக் கொடுக்கும்.

4.உங்களைப் பற்றி நீங்களே உயர்த்திச் சொல்லாமல் இருந்தால் வேறு யார்தான் சொல்வார்கள். சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் மேலதிகாரிகளிடம் நீங்கள் சமீபத்தில் அலுவலகத்துக்காக செய்து முடித்த சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

5.உங்கள் தரப்பு வாதங்களை எப்போதும் உரிய ஆதாரங்களுடன் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லுங்கள். வழவழ டைப் ஆட்களைப் போல் பேசாதீர்கள்.

அதிசயக்கட்டளைகள் அய்ந்து......

, , ,

‘சொந்தக் காலில் நிற்பது முக்கியமில்லை. நின்ற இடத்தில் நிலைப்பதுதான் முக்கியம்’ என்பார்கள். எந்த ஆபீஸில் வேலை செய்தாலும் அதில் நிரந்தரமாக நிலைத்து நிற்க வேண்டும். அதற்கு 5 எளிய வழிகள்.

1.நீங்கள் என்னதான் நல்லவராகவும், நாணயமானவராகவும் இருந்தாலும் திறமை இல்லாவிட்டால் மதிப்பு இருக்காது. எனவே, ஒவ்வொரு மாதமும் உங்கள் திறமையில் ஒரு சதவீதத்தையாவது கூட்டிக் கொள்ளுங்கள்.

2.ஆபீஸில் பலம்பொருந்தியவர் யார் எனக் கண்டறியுங்கள். அவர்கள் சொல்லும் வேலைகளை விரைந்து முடியுங்கள். அவர்கள் விரும்பும் விதத்தில், எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்து முடிப்பவர் என்ற இமேஜை எல்லோரிடமும் வளர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான நேரங்களில் இது கை கொடுக்கும்.

3.ஆபீஸ் என்றால் கோஷ்டி அரசியல் இல்லாமல் இருக்காது. நீங்கள் எந்த கோஷ்டியிலும் உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளாதீர்கள். முடிந்தால், அந்த கோஷ்டிகளை இணைக்கும் பாலமாகச் செயல்படுங்கள். இது அதிக பலன்களைக் கொடுக்கும்.

4.உங்களைப் பற்றி நீங்களே உயர்த்திச் சொல்லாமல் இருந்தால் வேறு யார்தான் சொல்வார்கள். சமயம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் மேலதிகாரிகளிடம் நீங்கள் சமீபத்தில் அலுவலகத்துக்காக செய்து முடித்த சாதனைகளை எடுத்துச் சொல்லுங்கள்.

5.உங்கள் தரப்பு வாதங்களை எப்போதும் உரிய ஆதாரங்களுடன் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லுங்கள். வழவழ டைப் ஆட்களைப் போல் பேசாதீர்கள்.

பொய்யில்லை -- கண்ட உண்மை............

, , , ...


சின்னதாய் ஒரு முயற்சி.

அட வேறு எதுவுமில்லை. தினமும் காலையிலே 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். அவ்வளவுதான். சனியாவது, ஞாயிறாவது - எந்தக்கிழமையாக இருந்தாலும் காலை 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். போய்யா உன் வேலையைப் பாத்துக்குட்டு அப்புடீங்கறியளா.

உங்களுக்காகத்தான் நான் இப்ப எழுதிக்கிட்டு இருக்கேன்.அது சரி.. 6.00 மணிக்கு எழுந்தபிறகு என்ன பண்ணுறது அப்புடின்னு கேக்குறவங்க இந்தப்பக்கம் வாங்க

அட 6.00 மணிக்கு எழுந்த பிறகு காலையிலே பல மேட்டர்கள் இருக்குங்க. சும்மா 10 மணி வரைக்கும் தூங்குறானே நண்பன் அவனை 10 நிமிடத்துக்கு ஒரு முறை எழுப்பலாம்ல. கண்டகண்ட ஓட்டல்களிலே சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறதுக்குப் பதிலா உங்கள் கையாலே சமைத்துப் பாருங்க. ஒரு வித்தியாசமா தெரிந்ததை வைத்து சமையல் முயற்சி பண்ணுங்க எண்ணி 10 நாளிலே உங்கள் சமையல் உங்களுக்கே ரொம்பப் பிடிக்கும்.

ஜிம்முக்குத்தான் போகமுடியவில்லை. இந்தப் பாழாப்போன சாப்ட்வேரு எழுதி எழுதி வயிறு பெருத்துத் தொப்பை விழுது. சும்மா தூங்குறதுக்கு பதிலா ஒரு குத்துப்பாட்டைப் போட்டு ஒரு குத்தாட்டம் போடுங்க. ஒரு அரை மணி நேரம் - (அப்படிப்போடு போடு ... பாட்டுக்கூட OK) ஆட்டம் ஆடிப்பாருங்க. 15 நாளு வெறித்தனமா இப்படி ஆடுனீங்கன்னா அப்புறம் இந்த ஆட்டம் உங்களுக்கே ரொம்பப்பிடிக்கும்.

உங்களுக்கு இங்கிலீஸ் நல்லா வராது என்று வைத்துக்கொண்டால் அதைத்தான் ஒரு சின்ன ஆடியோரெக்காடர் கருவியைக் கொண்டு - நீங்களே எதாவது நெட்டில் டவுன்லோடு பண்ணியதை வாசித்து - பேசிப்பதிவு செய்து தினமும் கேட்டுப்பாருங்க. எந்த இடத்திலே தவறு செய்கிறோம் அப்படிங்கறதை ஒரு அனலைஸ் பண்ணலாம். மறுபடி மறுபடி வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கேட்டு தப்பைத்திருத்திக்கோங்க. சரி.

எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் அப்படிங்கறவங்க தூங்கப்போகிடாதீங்க. ஒரு வெளிமாநில மொழி / வேற்று தேச மொழியில் பரிச்சயம் ஆகுவதற்காக - அதை அரை மணி நேரம் பயிற்சி எடுக்கலாம்ல.

சாப்ட்வேருதான் கதின்னு இருக்குறவங்க - எதாவது ஒரு செர்ட்டிபிகேசன் கோர்ஸ் - செல்ப்ஸ்டடி - செய்து செர்ட்டிபிகிசேன் எழுதலாம்ல. போனவருசம் எழுதலாம்னு நினைச்சேன் - எழுத நேரம் இல்லை. இந்த வருசம் எழுதலாம்னு நினைக்கிறேன் - ஆனால் அதை பிரிப்பேர் பண்ண நேரமில்லை அப்படின்னு சப்பைக்கட்டுக் கட்டுரவங்கதானே நீங்கள் எல்லாம்.

6.00 மணிக்கு எழுந்தால் உங்களுக்கு 3.00 மணிநேரம் மிச்சமாகுதுல்லே. அதை சரியாகப் பயன்படுத்தலாம்ல. நைட்டு 1 மணிவரைக்கும் என்ன காரியத்துக்காக முழிக்கிறீங்க. எதாவது பிரயோசனம். வேலையை முடிச்சுட்டு இரவு 10.00 க்கு படார்னு தூக்கத்தைபோடுங்க. 6.00 மணிக்கு எழுந்துவிடுங்கள். சரி. எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் ..

செர்ட்டிபிகேசன் பலதும் முடிச்சுட்டேன்.. தூங்கலாமேன்னு நினைக்குறீங்களா? அட - உங்களுக்கு கார் டிரைவிங்க் தெரியாதுல்ல. போங்க போகி முதல்காரியமா அதைக் கத்துக்கோங்க..

ஒரு ம்யூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்கக் கத்துக்கலாம்ல. ஒரு ட்ரம்ஸ் வாங்கி காட்டுத்தனமா பிராக்டீஸ் பண்ணி உங்கள் கேள்-பிரண்டை அசத்தலாம்ல. இப்பப் பாரு பட்டையைக் கிளப்புறேன் அப்படின்னு ஒரு ரிதம் பார்ம் பண்ணி வாசிச்சுக்காட்டுங்க. அசத்துங்க.

88 கிலோ வெயிட்டு இருக்குது. ஆனால் 10.00 மணி வரை தூக்கம். வெள்ளிக்கிழமை ஆனால் தீர்த்தப் பார்ட்டி - இப்படியே இருந்தால் என்ன ஆவது. உடம்பு நீங்க சொன்னதை கேட்காது.. நீங்கள்தான் உடம்பு சொன்னதை கேட்கனும். கேவலமா இருக்குல்ல.

அட எல்லாம் பண்ணியாச்சு.. வேறு வேலை எதுவும் இல்லை.. அப்படின்னு ஏன் சொல்லுறீங்க.. உங்கள் பக்கத்துவீட்டுப் பசங்களுக்கு இலவசமா டியூசன் சொல்லித் தரலாம்ல.

சனி, ஞாயிறுகளில் எதாவது ஒரு சாப்ட்வேர் கோச்சிங்க் சென்டரிலே - வீக் எண்ட் கிளாஸ் எடுங்க. சம்பளம் குறைவாக இருக்குதுன்னு கவலைப் படாதீங்க. வெறும் தியரி கிளாஸ் மட்டும் எடுங்க.

சனி,ஞாயிறுகளில் மப்பு அடித்து முழுபோதையிலே இருக்கத்தான் வேண்டுமா என்ன? பொழுது போகவில்லைன்னா.. அட என்னை மாதிரி ஒரு பிலாக் ஓப்பன் பண்ணி - யாரும் படிப்பாங்க / படிக்கமாட்டாங்கன்ற கவலையில்லாமல் சும்மா காட்டுத்தனமா இப்படி- இதுமாதிரி எதையாவது எழுதிப் போஸ்ட்டாவது பண்ணலாம்ல.

அட சும்மாசொல்லலைங்க.. இவையெல்லாம் பொய்யில்லை. -- கண்ட உண்மை..


(Source:- http://tamizh2000.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88)
Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31