Skip navigation.

வாழ்க தமிழ்!வளர்க அதன் சிறப்பு!

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

Posts tagged with "Faith"

பரமஹம்சர் கண்ட பராசக்தி!

, , ,

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

"சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!"

இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
ஆடிக்களிப்பவன் யாரோ அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.


"பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
எந்த படித்துறையிலும் இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
பலவழிகளைக் காட்டுகின்றன "என்கிறார் பரமஹம்சர்.

சக்திசமயத்திலும் பலபடித்துறைகள் உண்டு.

தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.


பாரதியாரின் ஊழிக்கூத்து பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
ஆகாயம் கறுத்து வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும் என மேலும் சொல்கிறார்.

தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

பேயைக்கொலையை
பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

என்கிறார் பாரதியார்.

அன்னை அன்னை ஆடுங்கூத்தை
நாடச்செய்தாய் என்னை...

சக்திப்பேய்தான் தலையொடுதலைஅக்ள்முட்டிச்- சட்டச்
சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
நின் விழியனல்போய் எட்டித்-தானே
எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

தனது மார்க்கம் இறையைத் தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ பாவித்துவணங்கலாம் என்னும்
பரமஹம்சர்" நான் என்னைக் என்னைகுழந்தையாகபாவித்துக்கொண்டேன் "என்கிறார்.

மனம் உள்முகமாகத் திரும்பினால் அதுவாசற்கதவை சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் எனபமதங்கள்கூறுவதை ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
நிலையில் உயரலாம்.

யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?

உறு‌‌தி வே‌ண்டு‌ம்......

, , ,

மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்

பொய்யில்லை -- கண்ட உண்மை............

, , , ...


சின்னதாய் ஒரு முயற்சி.

அட வேறு எதுவுமில்லை. தினமும் காலையிலே 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். அவ்வளவுதான். சனியாவது, ஞாயிறாவது - எந்தக்கிழமையாக இருந்தாலும் காலை 6.00 மணிக்கு எழுந்துவிடவேண்டும். போய்யா உன் வேலையைப் பாத்துக்குட்டு அப்புடீங்கறியளா.

உங்களுக்காகத்தான் நான் இப்ப எழுதிக்கிட்டு இருக்கேன்.அது சரி.. 6.00 மணிக்கு எழுந்தபிறகு என்ன பண்ணுறது அப்புடின்னு கேக்குறவங்க இந்தப்பக்கம் வாங்க

அட 6.00 மணிக்கு எழுந்த பிறகு காலையிலே பல மேட்டர்கள் இருக்குங்க. சும்மா 10 மணி வரைக்கும் தூங்குறானே நண்பன் அவனை 10 நிமிடத்துக்கு ஒரு முறை எழுப்பலாம்ல. கண்டகண்ட ஓட்டல்களிலே சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறதுக்குப் பதிலா உங்கள் கையாலே சமைத்துப் பாருங்க. ஒரு வித்தியாசமா தெரிந்ததை வைத்து சமையல் முயற்சி பண்ணுங்க எண்ணி 10 நாளிலே உங்கள் சமையல் உங்களுக்கே ரொம்பப் பிடிக்கும்.

ஜிம்முக்குத்தான் போகமுடியவில்லை. இந்தப் பாழாப்போன சாப்ட்வேரு எழுதி எழுதி வயிறு பெருத்துத் தொப்பை விழுது. சும்மா தூங்குறதுக்கு பதிலா ஒரு குத்துப்பாட்டைப் போட்டு ஒரு குத்தாட்டம் போடுங்க. ஒரு அரை மணி நேரம் - (அப்படிப்போடு போடு ... பாட்டுக்கூட OK) ஆட்டம் ஆடிப்பாருங்க. 15 நாளு வெறித்தனமா இப்படி ஆடுனீங்கன்னா அப்புறம் இந்த ஆட்டம் உங்களுக்கே ரொம்பப்பிடிக்கும்.

உங்களுக்கு இங்கிலீஸ் நல்லா வராது என்று வைத்துக்கொண்டால் அதைத்தான் ஒரு சின்ன ஆடியோரெக்காடர் கருவியைக் கொண்டு - நீங்களே எதாவது நெட்டில் டவுன்லோடு பண்ணியதை வாசித்து - பேசிப்பதிவு செய்து தினமும் கேட்டுப்பாருங்க. எந்த இடத்திலே தவறு செய்கிறோம் அப்படிங்கறதை ஒரு அனலைஸ் பண்ணலாம். மறுபடி மறுபடி வாய்ஸ் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கேட்டு தப்பைத்திருத்திக்கோங்க. சரி.

எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் அப்படிங்கறவங்க தூங்கப்போகிடாதீங்க. ஒரு வெளிமாநில மொழி / வேற்று தேச மொழியில் பரிச்சயம் ஆகுவதற்காக - அதை அரை மணி நேரம் பயிற்சி எடுக்கலாம்ல.

சாப்ட்வேருதான் கதின்னு இருக்குறவங்க - எதாவது ஒரு செர்ட்டிபிகேசன் கோர்ஸ் - செல்ப்ஸ்டடி - செய்து செர்ட்டிபிகிசேன் எழுதலாம்ல. போனவருசம் எழுதலாம்னு நினைச்சேன் - எழுத நேரம் இல்லை. இந்த வருசம் எழுதலாம்னு நினைக்கிறேன் - ஆனால் அதை பிரிப்பேர் பண்ண நேரமில்லை அப்படின்னு சப்பைக்கட்டுக் கட்டுரவங்கதானே நீங்கள் எல்லாம்.

6.00 மணிக்கு எழுந்தால் உங்களுக்கு 3.00 மணிநேரம் மிச்சமாகுதுல்லே. அதை சரியாகப் பயன்படுத்தலாம்ல. நைட்டு 1 மணிவரைக்கும் என்ன காரியத்துக்காக முழிக்கிறீங்க. எதாவது பிரயோசனம். வேலையை முடிச்சுட்டு இரவு 10.00 க்கு படார்னு தூக்கத்தைபோடுங்க. 6.00 மணிக்கு எழுந்துவிடுங்கள். சரி. எனக்கு இங்கிலீஸ் நல்லாவரும் ..

செர்ட்டிபிகேசன் பலதும் முடிச்சுட்டேன்.. தூங்கலாமேன்னு நினைக்குறீங்களா? அட - உங்களுக்கு கார் டிரைவிங்க் தெரியாதுல்ல. போங்க போகி முதல்காரியமா அதைக் கத்துக்கோங்க..

ஒரு ம்யூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்கக் கத்துக்கலாம்ல. ஒரு ட்ரம்ஸ் வாங்கி காட்டுத்தனமா பிராக்டீஸ் பண்ணி உங்கள் கேள்-பிரண்டை அசத்தலாம்ல. இப்பப் பாரு பட்டையைக் கிளப்புறேன் அப்படின்னு ஒரு ரிதம் பார்ம் பண்ணி வாசிச்சுக்காட்டுங்க. அசத்துங்க.

88 கிலோ வெயிட்டு இருக்குது. ஆனால் 10.00 மணி வரை தூக்கம். வெள்ளிக்கிழமை ஆனால் தீர்த்தப் பார்ட்டி - இப்படியே இருந்தால் என்ன ஆவது. உடம்பு நீங்க சொன்னதை கேட்காது.. நீங்கள்தான் உடம்பு சொன்னதை கேட்கனும். கேவலமா இருக்குல்ல.

அட எல்லாம் பண்ணியாச்சு.. வேறு வேலை எதுவும் இல்லை.. அப்படின்னு ஏன் சொல்லுறீங்க.. உங்கள் பக்கத்துவீட்டுப் பசங்களுக்கு இலவசமா டியூசன் சொல்லித் தரலாம்ல.

சனி, ஞாயிறுகளில் எதாவது ஒரு சாப்ட்வேர் கோச்சிங்க் சென்டரிலே - வீக் எண்ட் கிளாஸ் எடுங்க. சம்பளம் குறைவாக இருக்குதுன்னு கவலைப் படாதீங்க. வெறும் தியரி கிளாஸ் மட்டும் எடுங்க.

சனி,ஞாயிறுகளில் மப்பு அடித்து முழுபோதையிலே இருக்கத்தான் வேண்டுமா என்ன? பொழுது போகவில்லைன்னா.. அட என்னை மாதிரி ஒரு பிலாக் ஓப்பன் பண்ணி - யாரும் படிப்பாங்க / படிக்கமாட்டாங்கன்ற கவலையில்லாமல் சும்மா காட்டுத்தனமா இப்படி- இதுமாதிரி எதையாவது எழுதிப் போஸ்ட்டாவது பண்ணலாம்ல.

அட சும்மாசொல்லலைங்க.. இவையெல்லாம் பொய்யில்லை. -- கண்ட உண்மை..


(Source:- http://tamizh2000.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88)

பாதச்சுவடுகள்........

, , , ...

கஷ்ட காலங்களில் கடவுள் நம் வாழ்க்கையில் இருந்து முழுவதும் விலகி காணாமலேயே போய் விடுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. அதுவும் தொடர்ந்து கஷ்டங்கள் வரும் போது கடவுள் உண்மையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் யாருக்கும் வரலாம். அப்படி ஒரு சந்தேகம் வந்ததைப் பற்றிய கவிதை இது. முதன் முதலில் ஆங்கிலத்தில் படித்த போது மனதை வெகுவாகக் கவர்ந்தது. ஆங்கிலத்தில் எழுதியது யார் என்று தெரியவில்லை. Anonymous என்று போட்டிருந்தது. அதை தமிழில் வெ.அனந்தநாராயணன் என்பவர் மொழிபெயர்த்ததை நீங்களும் படியுங்களேன்.

பாதச்சுவடுகள்

அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந்தனியனாய் அக் கடற்கரை மணலில்
வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன்.
எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன.
ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது.
எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல்
மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.
ஓ! இதென்ன?
எனது பாதச் சுவடுகளின் அருகில்
யாருடையவை இம்மற்றொரு ஜோடிசுவடுகள்?
உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!
புல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை!
என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா
உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.
ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்?
அதுவும் என் வாழ்க்கையின் மிகவும்
சோதனையான காலங்களின் போது....
எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை.
தேவா, இவ்வளவு தான் உன் கருணையா?
உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது
கை விட்டு விட்டாயே என்னை
கூக்குரலிட்டேன் நான்.
அசரிரீயாக பதில் கேட்டது-
அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள்
உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை.
நடக்கவியலாத உன்னை நான்
சுமந்து வந்த சுவடுகள்!.

Download Opera, the fastest and most secure browser
December 2009
S M T W T F S
November 2009January 2010
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31