நரம்பு தளர்ச்சி நீங்க......
Monday, 3. November 2008, 07:11:37
சித்த மருத்துவம்.
1.வல்வாரைக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து உண்டு வர நரம்பு தளர்ச்சி நீங்குவதடன் மன தைரியமும் ஆண்மையும் பெருகும்.
2.செம்பருத்திப் பூவைப்: பொடி செய்து அத்துடன் தேன் அல்லது தண்ணீருடன் சேர்த்துக்
கலந்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதுடன் இதய சம்பந்தமான நோய்களும் தீரும்.
3.எலும்பிச்சம் பழச் சாற்றுடன் சிறிது திப்பிலி சர்க்கரை இவற்றைச் சேர்த்து அரைத்து அளவாய் உண்டு வர நரம்பு தளர்ச்சி தீரும்.
4.வல்லாரை�� தூதுவளை ஆகியவை சம எடை எடுத்து உலர்த்திப் பொடித்து பசுவின்
மோரில் கலந்து குடித்து வர நரம்பு தர்ச்சி தீரும்.
5.வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுடன் பசுவின் பாலைச் சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு அருந்தி வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
6.மாதுளம் பழச் சாற்றுடன் Nசுத்தமான தேன் சேர்த்த உண்டு வர நரம்பு தளர்ச்சி தீரும்.
நரம்பு தளர்ச்சி தீர லேகியம்.
சுக்கு,மிளகு,திப்பிலிகோ~;டம்,அதிமதுரம்,ஜீரகம்,ஏலம்,வால்மிளகு,கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி இவைகள் வகைக்கு 10கிராம் வீதம் எடுத்து இள வருப்பாக வறுத்து சூரணம் செய்து வைக்கவும்.
700கிராம் சீனா கற்கண்டை 700 மில்லி பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.
மேற்கண்ட இரண்டு சூரணங்களையும் பாகில் தூவிக் கிண்டி பின் நெய்
175கிராம் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைத்து சத்தமான தேன் 175 கிராம் விட்டுக் கிண்டி ஜாடியில் பத்திரப் படுத்தவும்.இதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும்.














