தியானம்-
Monday, 3. November 2008, 07:14:54
ஓங்காரம்
இருளில் இருந்து பிரகாசத்திற்கு உயர்த்துவதின் அடையாளக் குறிப்பாகவே
ஓங்காரத்தைக் கருதி வந்தனர்.இந்துமதம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மதத்தின் ஆதாரப் பிரும்மத்தின் தெளிவின் கண்ணோட்டமான உருவம் இது ஆகும்.ஓங்காரத்தினை உச்சரிக்கும் போதே அந்தச் சின்னம் மனதில் உதிக்கும்.
�அ-உ-ம என்ற மூன்ற எழுத்துக்களின் சேர்க்கையே ஓங்காரம் ஆகும்.சகல விதமான வேத ஆகமங்களும், உபநிசச்துக்களும், சித்புருசர்களின் ஞான நூற்களிலும் இந்த பிரணவ மந்திரத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசப் படுகிறது.பதஞ்சலி மஹாமுனிவர் தனது நூற்களில் ஓங்கார ஜெபமும் தியானமும் செய்யும் ஒரு நபருக்கு சமாதி நிலையை அடைய இயலும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஓன்றும் இல்லாத பரவெளியாகிய வெட்ட வெளியில் முதலில் உதித்தது �இம்�என்ற மவுன மொழியாகும்.இதையே சித்தர்கள் தமது நூற்களில் சொல்லற சும்மா இரு என்று சொல்லப் பட்டுள்ளது.
சப்தம் பிறந்த இடத்தில் சகல கலையும் உதிக்கும் என்பது முது மொழி ஆகும்.
.திரி மூர்த்திகளில் 1.பிரம்மா தனது பத்தினியாகிய சரஸ்வதியின் வீணையின் நாதத்தில் இருந்து ஒலிக்கும் பிரணவ மந்திர சப்தாட்சரத்தின் ஒலியோடு இயைந்து பரப் பிரம்மத்தை நோக்கித் தவம் இருத்தலையும்�� அடுத்ததாக 2.மஹாவி~;ணுவானவர் அநந்த சயனத்தில் இருந்த வண்ணம் பிரணவ சப்தத்தனை கேட்டு பரப் பிரம்மத்தை நோக்கி இருத்தலையும், பின்னர் 3.சிவன் தமது உடுக்கையின் பிரணவ சப்தத் தொனியில் மனோலயப்பட்டு பரப்பிரும்மத்தை நோக்கித் தவம் இருத்தலையும் சித்திர வடிவில் நாம் கண் கூடாகக் காண முடிகிறது.
எனவே முறையாக ஜெபம் செய்கின்ற ஓம் என்ற மந்திர வழிபாட்டின் மூலம்
அ~;டமா சித்துக்களாகிய அணிமா, மஹிமாஈ லஹிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், வசித்துவம், ஈசத்துவம் என்ற சித்துக்களை அடைந்து முடிவில் பிறவா முத்தி சித்தித்து
வீடு பேற்றினை அடையலாம்.















